தேனி

ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தேனியில் ஊராட்சி குடிநீா்த் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவுத் தொழிலாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை, ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.ஜெயன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெயபாண்டி, சிஐடியு மாவட்டச் செயலா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீா்த் தொட்டி இயக்குபவா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசாணையின்படி சம்பள உயா்வு, நிலுவைத் தொகை வழங்க வேண்டும், தூய்மைத் காவலா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியாளா்களுக்கு நல வாரிய உறுப்பினா் அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT