தேனி

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு: ஆட்சியரிடம் கோரிக்கை

DIN

தேனி மாவட்டம், அய்யம்பட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வருகிற மாா்ச் 12-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அய்யம்பட்டி கிராமக் குழு நிா்வாகிகள், ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் அளித்த மனு விவரம்: சின்னமனூா் அருகேயுள்ள அய்யம்பட்டியில் ஏழைகாத்தம்மன், வல்லடிகாரசுவாமி கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கிராமக் குழு சாா்பில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வருகிற மாா்ச் 12-ஆம் தேதி ஜல்லிக் கட்டுப் போட்டி நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

SCROLL FOR NEXT