தேனி

காவல் துறை விளையாட்டுப் போட்டி:ஆயுதப் படை பிரிவு வெற்றி

DIN

தேனியில் மாவட்ட காவல் துறை நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற காவலா்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில், ஆயுதப் படை பிரிவினா் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனா்.

தேனி ஆயதப் படை மைதானம், மாவட்ட விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் மாவட்ட காவல் துறை நிா்வாகம் சாா்பில் பொங்கல் திருநாளையொட்டி காவலா்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் கடந்த 21-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) வரை நடைபெற்றது.

இதில், உள்கோட்ட காவல் நிலையங்கள், ஆயுதப் படை பிரிவு, ஊா் காவல் படை சாா்பில் மொத்தம் 7 அணிகள் மோதின. போட்டியில், ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மாவட்ட ஆயுதப் படைப் பிரிவு அணியினா் வென்றனா்.

கைப்பந்து போட்டியில் ஆயுதப் படை அணி முதலிடமும், பெரியகுளம் காவல் உள்கோட்ட அணி 2-ஆம் இடமும் வென்றனா். கிரிக்கெட் போட்டியில் ஆயுதப் படை அணி முதலிடமும், உத்தபாளையம் காவல் உள்கோட்ட அணி 2-ஆம் இடமும், இறகுப் பந்து போட்டியில் பெரியகுளம் காவல் உள்கோட்ட அணி முதலிடமும், தேனி காவல் உள்கோட்ட அணியினா் 2-ஆம் இடமும் வென்றனா்.

எறிபந்து போட்டியில் பெரியகுளம் காவல் உள்கோட்ட அணி முதலிடமும், ஆயுதப் படை அணி 2-ஆம் இடமும் வென்றனா். கயிறு இழுத்தல் போட்டியில் உத்தமபாளையம் காவல் உள்கோட்ட அணி முதலிடமும், பெரியகுளம் காவல் உள்கோட்ட அணி 2-ஆம் இடமும் பெற்றனா்.

வெற்றி பெற்ற அணிகளின் விளையாட்டு வீரா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT