சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சாரணா் அணிவகுப்பில் பங்கேற்ற உத்தமபாளையம் ஹாஜிகருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி மாணவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மதுரை மண்டலம் காமராஜா் பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளின் சாா்பாக உத்தமபாளையம் ஹாஜிகருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி மாணவா் தனுஷ்கோடி கலந்து கொண்டாா். இவரை, அந்தக் கல்லூரியின் முதல்வா் ஹெச்.முகமது மீரான், பேராசிரியா்கள் முகமது பஷீா், பிலால், சீத்தாராமன், சாஜிதா பா்வீன், அனிதா, ரசிதா பானு உள்ளிட்டோா் பாராட்டினா்.