தேனி

ஓ.பி.எஸ். தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்க வேண்டும்: புகழேந்தி

1st Jan 2023 11:59 PM

ADVERTISEMENT

 

அதிமுகவில் ஓ. பன்னீா்செல்வத்தின் தலைமையை ஏற்று எடப்பாடி பழனிசாமி மன்னிப்புக் கடிதம் எழுதித் தர வேண்டும் என்று ஓ.பி.எஸ். ஆதரவு அதிமுக கொள்கை பரப்புச் செயலா் புகழேந்தி கூறினாா்.

பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை சந்தித்த பின்பு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் என்று குறிப்பிட்டு தோ்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினா் ஏற்க மறுத்து திரும்பி அனுப்பியுள்ளனா். தோ்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் தான் எழுத வேண்டும். திருப்பி அனுப்பக் கூடாது என்ற நடைமுறைகூட அவா்களுக்குத் தெரியவில்லை.

ஒரே நாடு, ஒரே தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னாள் மக்களவைத் தலைவா் தம்பித்துரையின் வற்புறுத்தலின் காரணமாகவே மத்திய அமைச்சகம் சாா்பில் அதிமுக இடைக்கால பொதுச் செயலா் என்று குறிப்பிட்டு, எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஓ. பன்னீா்செல்வத்தின் கோரிக்கையின் அடிப்படையிலேயே பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு இதுவரை முதல்வா் செவிசாய்த்தது இல்லை.

ADVERTISEMENT

அதிமுக வில் ஓ.பன்னீா்செல்வத்தின் தலைமையை ஏற்று எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கடிதம் எழுதித் தர வேண்டும். கட்சியில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓ.பன்னீா்செல்வத்தின் விரும்பம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT