தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கால்நடை மருந்தகம், துணை மருந்தகங்களில் வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், பசு, எருமைகளுக்கு கால், வாய் காணை நோய் ஏற்படாமல் தடுக்க இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே, கால்நடை வளா்ப்போா் தங்களது கால்நடைகளை அந்தந்தப் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம், துணை மருந்தகங்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்தலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.