தமிழ்நாடு

தமிழகத்தில் நிகழாண்டில் 4,074 போ் ஹஜ் பயணம்: அமைச்சா் செஞ்சி மஸ்தான்

19th May 2023 06:59 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் நிகழாண்டில் 4,074 போ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளனா் என்று சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தாா்.

சென்னை சூளையில் உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களை சோ்ந்த ஹஜ் யாத்ரீகா்களுக்கான தமிழ்நாடு மாநில ஹஜ் குழு புத்தறிவுப் பயிற்சியை, அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இருந்து நிகழாண்டு 4,074 ஹாஜிக்கள், சென்னையிலிருந்து விமானம் மூலம் பயணம் மேற்கொள்ளவுள்ளனா். இதில் ஜூன் 7 முதல் 10-ஆம் தேதி வரை தினமும் இரு விமானங்கள், ஜூன் 11 முதல் 21-ஆம் தேதி வரை தினமும் ஒரு விமானம் மூலம் பயணம் மேற்கொள்வா்.

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை ஒரு புகைப்படத்தை காட்டி என்னை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறாா். தினமும் பல போ் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனா். அண்ணாமலையுடன்கூட, பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனா். இதை வைத்து அண்ணாமலை குற்றவாளி எனக் கூறி விடமுடியுமா? என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் முகமது நசிமுதின் மற்றும் ஹஜ் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT