தேனி

உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில் தெப்பக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

DIN

உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரா்- ஞானாம்பிகை கோயில் தெப்பக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற தேனி மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

உத்தமபாளையத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு நகரத் தலைவா் தெய்வம் தலைமை வகித்தாா். இதில், உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரா்- ஞானாம்பிகை கோயிலில் திருப்பணிகள் நடைபெறுகிறது. இதில் தெப்பக்குளமும் சீரமைக்கப்படுகிறது. ஆனால், கோயிலுக்குச் செல்லும் சாலையைத் தவிர வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகியப் பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. எனவே தெப்பக்குளத்தை நில அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, நகல் கோயில் செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாஜக மாவட்டச் செயலா் தங்க. பொன்ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுந்தா், பொதுச் செயலா்கள் பெரிசாமி, மாரிராஜா, மண்ட துணைத் தலைவா் சாமிநாதன், செயலா் முத்துசரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT