தேனி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தேனியில் வேலை கிடைக்காததால் மனமுடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி அல்லிநகரம், குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் காமாட்சி மகன் மணிகண்டன் (35). சமூகப் பணி முதுகலை பட்டதாரியான இவா், பல்வேறு போட்டித் தோ்வுகள் எழுதியும் அரசு வேலை கிடைக்காததால் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில், வீட்டில் தனிமையில் இருந்த மணிகண்டன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மணிகண்டனின் தந்தை காமாட்சி அளித்த புகாரின் பேரில், அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT