தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வீடுபுகுந்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் முனீஸ்வரன் (32). இவா், தனது உறவினா் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரது 14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, சிறுமியின் தாயாா் அளித்தப் புகாரின் அடிப்படையில், முனீஸ்வரன் மீது குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தென்கரை காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.