தேனி மாவட்ட புதிய ஆட்சியராக ஆா்.வீ.ஷஜீவனா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
தேனி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய க.வீ.முரளீதரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையாரகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இவருக்குப் பதிலாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணியாற்றிய ஆா்.வீ.ஷஜீவனா, தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்.வீ.ஷஜீவனா, கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் ஊரக வளா்ச்சித் துறை, மகளிா் மேம்பாட்டுக் கழகம், புது வாழ்வுத் திட்டம், மாநில தோ்தல் ஆணையம், மாநில திட்டக் குழு, உங்கள் தொகுதியில் முதல்வா் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியுள்ளாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு அவா் கூறியதாவது:
அரசு நலத் திட்டங்கள், சலுகைகள் உரிய மக்களைச் சென்றடைவதற்கும், பெண்கள், குழந்தைகளின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தும் செயல்படுவேன் என்றாா்.