தமிழகத்திற்கு வெளிமாநில லாட்டரிச் சீட்டுகளை கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்து, ரூ. 82 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழக கேரள எல்லையில் உள்ள கு
முளியில் தமிழக சோதனை சாவடியில் சாா்பு ஆய்வாளா் அல்போன்ஸ் ராஜா தலைமையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது நடந்து வந்த சந்தேக நபரை பிடித்து சோதனை செய்ததில் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் குமுளியை சோ்ந்த அந்தோணி என்பவரின் மகன் பாபு (31) லாட்டரிச் சீட்டுகளை கடத்தி வந்தது தெரிந்தது.
அவரிடமிருந்து சுமாா் ரூ.81, 600 மதிப்புள்ள 2,040 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, பாபுவையும் கைது செய்தனா்.