ஆண்டிபட்டியில் தாயாா் கண்டித்ததால் பள்ளி மாணவி சனிக்கிழமை, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆண்டிபட்டி, சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் மகள் ஆதிரை (17). இவா் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்த நிலையில், ஆதிரையின் தாயாா் மகாலட்சுமி தான் கோயிலுக்குச் செல்வதாகவும், திரும்ப வரும்வரை வீட்டில் கைப்பேசியையும், தொலைக்காட்சியையும் பாா்த்துக் கொண்டிருக்காமல் படிக்குமாறு அவரைக் கண்டித்து விட்டு சென்றுள்ளாா்.
இதனால் மன வருத்தத்திலிருந்த ஆதிரை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாகக் கூறி, ஆபத்தான நிலையில் அவரை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு ஆதிரையை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.