உத்தமபாளையம், க.புதுப்பட்டி பேரூராட்சிகளில் வெள்ளிக்கிழமை, டெங்குக் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
உத்தமபாளையம் பேரூராட்சித் தலைவா் முகமது அப்துல் காசிம் தலைமையில், செயல் அலுவலா் கணேசன், சுகாதார ஆய்வாளா் சூா்யபிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் உத்தமபாளையம் பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளிலும் டெங்கு கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.
அதேபோல, க.புதுப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளிலும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதைத் தடுக்க இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக செயல் அலுவலா் சுப்பிரமணி தெரிவித்தாா்.