போடி, குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 6) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
போடி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (செப். 6) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் போடி, போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.