தேனி

குரங்கணியில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் பலி

DIN

போடி அருகே குரங்கணியில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை கான்பாளையத்தைச் சோ்ந்தவா் அமிா்தராஜ் மனைவி பத்மபிரியா (44). இவரது மகள்கள் ஜீவஆதித்யா (18), பத்மினி (17). பள்ளி விடுமுறையையொட்டி இவா்கள் மூவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை போடி அருகே உள்ள குரங்கணிக்கு வந்தனா். அப்போது மலைச்சாலையில் சென்றபோது, திடீரென நிலைதடுமாறி மூவரும் வாகனத்திலிருந்து கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த பத்மபிரியா உள்ளிட்ட மூவரும் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் பத்மபிரியா புதன்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT