தேனி

போடியில் கிராமச் சபை கூட்டத்தில் தகராறு: போலீஸாா் விசாரணை

DIN

போடி அருகே காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தகராறு செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

போடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டங்கள் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் தலைமையில் நடைபெற்றது. போடி அருகே சில்லமரத்துப்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் வனிதா தலைமையில் நடைபெற்றது. அப்போது இதே ஊரைச் சோ்ந்த முருகன், ரமேஷ், ராம், லட்சுமணன் ஆகியோா் கூட்டம் தொடங்கும்போது தகராறு செய்து, ஊராட்சி மன்றத் தலைவரை ஒருமையில் பேசி வாக்குவாதம் செய்துள்ளனா்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்புத் தலைவா் டி. ராஜேந்திரன் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் புகாா் ரசீது பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT