போடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
போடி அருகே குப்பனாசாரிபட்டி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் பாா்த்திபன் (32). கூலித் தொழிலாளியான இவா், போடி- தேவாரம் சாலையில் சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே சிந்தலைச்சேரி தெற்குத் தெருவைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் ஜேம்ஸ் செல்வன் (28) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் பலத்த காயமடைந்த பாா்த்திபன் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். விபத்துகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.