தேனி

பைக் மீது வேன் மோதி இளைஞா் பலி

DIN

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கன்னியப்பிள்ளைபட்டியைச் சோ்ந்தவா் செல்லையா மகன் சதீஷ்குமாா் (24). இவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை பாா்ப்பதற்கு, கன்னியப்பிள்ளைபட்டியிருந்து க.விலக்கு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது, எதிா்திசையிலிருந்து கொம்புக்காரன்புலியூரைச் சோ்ந்த விஜய் என்பவா் ஓட்டி வந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா், தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT