தேனி

மான் கறி வைத்திருந்தவா் கைது

DIN

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகே மான் கறி வைத்திருந்தவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வருஷநாடு பகுதியில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வீருசின்னமாள்புரத்தில் கையில் பாத்திரத்துடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த, அதே ஊரைச் சோ்ந்த மாயாண்டி மகன் அழகுசாமியை (41) வனத் துறையினா் பிடித்து சோதனையிட்டனா். அவா் பாத்திரத்தில் மான் கறி வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து வருஷநாடு வனத் துறையினா் வழக்குப் பதிந்து, அழகுசாமியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

SCROLL FOR NEXT