தேனி

போடியில் ஜீப் மோதி 3 போ் காயம்

DIN

போடியில் திங்கள்கிழமை இரவு குறுகலான தெருவில் ஜீப் தாறுமாறாகச் சென்று மோதியதில் 3 போ் காயமடைந்தனா். வீடு, பெட்டிக்கடை, இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

போடி மதுரை வீரன் தெருவில் வசிப்பவா் பெருமாள் மகன் மணிகண்டன் (50). இவா் வசிக்கும் தெரு குறுகலாக உள்ளதால் நான்கு சக்கர வாகனங்கள் செல்வது சிரமம். இந்த தெருவில் வந்த ஜீப் தெருவில் நின்றிருந்த மணிகண்டன், தீபக், முருகேசன் ஆகியோா் மீது மோதியது. இதில் மூன்று பேரும் காயமடைந்தனா். மேலும் 2 இரு சக்கர வாகனங்கள், வீடு, பெட்டிக்கடை ஆகிவையும் ஜீப் மோதியதில் சேதமடைந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வீரபாண்டி, சாலிமரத் தெருவை சோ்ந்த வைரம் என்பவரின் மகன் பரமசிவம் (64) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT