தேனி

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கோ.மோகன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட சட்டச் செயலா் சீனிவாசன், மாவட்டச் செயலா் மலைச்சாமி, மாநில பொதுக் குழு உறுப்பினா் வேல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகள் தவிர வேறு பணிகள் வழங்கக் கூடாது, முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயா்வு, ஓப்படைப்பு விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு பணி வரன் முறை செய்ய வேண்டும், ஒவ்வொரு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கும் 8 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு இருசக்கர வாகன ஊா்வலம்

பவானி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஈரோடு-திண்டல் வரை புதிய மேம்பாலம்: அதிமுக வேட்பாளா் உறுதி

உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றிய 2 எஸ்எஸ்ஐ-க்களுக்கு ஐஜி பாராட்டு

இன்றைய நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT