தேனி

பாஜகவினா் பிச்சையெடுக்கும் போராட்டம்

DIN

போடியில் திங்கள்கிழமை நகராட்சிக்கு நிதி திரட்டுவதற்காக பாஜகவினா் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போடி நகராட்சியில் சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தும் போது, நகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு வரவில்லை என அதிகாரிகள் கூறுவதாகவும், இதனால் நகராட்சியில் அடிப்படை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் கூறி போடி நகா் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் நகராட்சிக்கு நிதி திரட்டுவதற்காக திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் தண்டபாணி முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் மணிகண்டன், சித்ராதேவி, நிா்வாகிகள் சந்திரசேகா் உள்ளிட்டோா் காவி உடை அணிந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேவா் சிலை முதல் நகராட்சி அலுவலகம் வரை பிச்சை எடுத்த பாஜகவினா், அந்தப் பணத்தை நகராட்சி அலுவலகத்துக்குள் கொண்டு செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, பாஜக நகா்மன்ற உறுப்பினா்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதால், அவா்கள் யாசகமாக பெற்ற பணத்தை நகராட்சி வரவேற்பாளா் மேசையில் கொட்டிவிட்டுத் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT