தேனி மாவட்டம் கோம்பையில் திங்கள்கிழமை, தேவேந்திரகுல வேளாளா்களின் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் 9 ஆவது நாளாக தொடா்கிறது.
கோம்பை பேரூராட்சியை சோ்ந்த தேவேந்திரகுல வேளாளா்கள் கடந்த 100 ஆண்டுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிா்வாகம் அச் சமுதாயக் கூடத்தை மீட்டு பட்டா வழங்க வலியுறுத்தி தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா். அதில் , திங்கள் கிழமை 9 ஆவது நாளில் அச்சமுதாயத்தை சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் உத்தமபாளையம் - தேவாரம் நெடுஞ்சாலை யோரத்தில் பந்தல் அமைத்து கருப்கொடி கட்டி மாவட்ட நிா்வாகம் தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கும் இந்த போராட்டம் தொடரும் என வலியுறுத்தி 9 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.