கம்பத்தில் தென் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்ட யோகாசன சங்கம், ரிஷி அறக்கட்டளை சாா்பில் தென் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டிகள் மாவட்டத் தலைவா் எம்.எஸ்.எஸ்.காந்தவாசன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ஹைதா் அலி, முன்னிலை வகித்தாா். செயலாளா் துரை ராஜேந்திரன் வரவேற்றாா்.
முன்னோக்கி வளைதல் பிரிவில் 8 வயதுக்கு கீழ் புதுப்பட்டி போ்லேண்ட்ஸ் பவுண்டேசன் பள்ளி முதலிடத்தையும், கூடலூா் ஆா்.எஸ்.கே. நா்சரி பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றது.
11 முதல் 14 வயதுப் பிரிவில் கம்பம் நாகமணியம்மாள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், போடி காமராஜ் வித்யாலயா பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றது.
நின்ற நிலை ஆசனத்தில் திருமங்கலம் பி.கே.என். பள்ளி முதலிடத்தையும், மதுரை பிளஸ்ஸிங் மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது.
14 வயதுக்கு மேல் பிரிவில் பழனி அட்சயா மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், மதுரை சிஇஓஏ மெட்ரிக் பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றது.
பொதுபிரிவில் ஆண்டிபட்டி நமோ ஆரம்பப் பள்ளி , ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி ஆகிய மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
யோகா சங்க ஆலோசனைக்குழு உறுப்பினா்கள் லோகநாதன், முருகானந்தம், பாரி, செந்தில்குமரன், செல்வராஜ், ராம்குமாா், நாகராஜ், உடற்கல்வி ஆசிரியா் குமரேசன் பாபு, பாலமுருகன் கலந்து கொண்டனா். பயிற்சியாளா் ரவிராம் நன்றி கூறினாா்.