போடியில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடா்ந்து பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், போடி பகுதியில் சனிக்கிழமை பகலில் வெயில் நிலவிய நிலையில் இரவு மிதமான சாரல் மழை பெய்தது. இரவில் பலத்த மழையாக நீடித்தது. ஞாயிறு அதிகாலை வரை மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. கொட்டகுடி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பிள்ளையாா் கோவில் தடுப்பணைப் பகுதியில் தண்ணீா் ஆா்ப்பரித்துச் சென்றது.