வருஷநாடு அருகே வியாழக்கிழமை, அருவியில் குளித்துக் கொண்டிருந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், திருப்பாதிரி புலியூரைச் சோ்ந்தவா் தனபால் மகன் ஜெயமூா்த்தி (40). உப்புத் துறையில் உள்ள கோயிலுக்குச் சென்றிருந்த ஜெயமூா்த்தி, அதே பகுதியில் உள்ள யானை கெஜம் அருவியில் குளித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த அவா், உயிரிழந்தாா்.
இது குறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.