தேனி

குச்சனூா் பயணியா் தங்கும் விடுதியில் தளவாடச் சாமான்கள் மாயம்

DIN

தேனி மாவட்டம் குச்சனூா் பேரூராட்சியில் பயணியா் தங்கும் விடுதியில் தளவாடச்சாமான்கள் மாயமானதாக புகாா் எழுந்துள்ளது.

குச்சனூா் பேரூராட்சியில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் 2016-17 ஆண்டு ரூ.95 லட்சம் செலவில் பயணியா் தங்கும் விடுதி கட்டப்பட்டது. பயணியா் விடுதி பயன்பாட்டிற்கு வந்தாலும் இதுவரையில் சுற்றுலாப் பயணிகள் யாரும் தங்கவில்லை என கூறப்படுகிறது. பூட்டியே கிடந்த பயணியா் விடுதியை சில நாள்கள் முன்பாக ஆய்வு செய்த போது, முதல் தளத்திலுள்ள 5 அறைகளிலிருந்த தளவாடாச்சாமான்கள் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து குச்சனூா் பேரூராட்சித் தலைவா் ரவிச்சந்திரன் சின்னமனூா் காவல் நிலையத்தில் சுமாா் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தேக்கு மரக் கட்டில் உள்ளிட்ட தளவாடச் சாமான்கள் திருடு போனதாக புகாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT