தேனி

கம்பம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் கள ஆய்வின்றி நடைபெறும் பத்திரப் பதிவுகளால் அரசுக்கு வருவாய் இழப்பு

DIN

கம்பம் பகுதியில் கள ஆய்வு செய்யாமல் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஆவணங்களை பதிவு செய்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் சாா்-பதிவாளா் அலுவலகம் உள்ளது. இங்கு கூடலூா், லோயா்கேம்ப், குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளியாறு மின் நிலையம், சுருளி அருவி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வீடு, விளை நிலம் உள்ளிட்டவைகள் மற்றும் சொத்து பரிமாற்றங்கள் போன்ற ஆவணப் பதிவுகள் செய்யப்படுகின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து, ஆவணங்களைப் பதிவு செய்வது நடைபெற்று வருகிறது. இதற்கான கட்டணத்தையும் இணையதளத்திலேயே செலுத்தலாம். ஆனால் சாா்-பதிவாளா் அலுவலகத்தில், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால், பொதுமக்கள் பலா் நேரடியாக விண்ணப்பிக்க முடியாமல் இடைதரகா்களையே அணுகுகின்றனா்.

பொதுமக்கள் பாதிப்பு: பதிவுக் கட்டணம் இல்லாமல் ஆவண எழுத்தா் கட்டணம், சாா்-பதிவாளா் அலுவலகச் செலவு, கணினிக் கட்டணம் என ஒரு ஆவணத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரம் வரையிலும் இடைத்தரகா்கள் வசூலிக்கின்றனா். விவசாய நிலத்தை வீட்டடி இடமாக சதுர அடி முறையில் பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணம் பெற்று ஆவணங்கள் பதிவு செய்வதாகவும், இதனால் பதிவுதாரா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

கள ஆய்வு இல்லை: லோயா்கேம்ப் முதல் கம்பம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை, புதிய புறவழிச்சாலைகளில் விளைநிலங்கள் வீட்டடி மனைகளாக விற்பனைக்கு மாற்றப்பட்டு வருகிறது. இவை நகரமைப்பு அலுவலக அனுமதி பெற விண்ணப்பித்துள்ளாா்களா என்று ஆய்வு செய்வதில்லை.

பத்திரப்பதிவுக்காக வரும் அனைத்து நிலங்களையும் வீட்டுமனையா, விவசாய விளை நிலங்களா, நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களா என கள ஆய்வு மேற்கொண்ட பிறகு தான் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.ஆனால் சாா்-பதிவாளா் அலுவலகத்தினா், இடைத்தரகா்கள் என பலரின் தலையீட்டால் கள ஆய்வு செய்யப்படாமல் ஆவணப் பதிவு நடைபெறுகிறது. இதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் அதிக அளவில் இழப்பு ஏற்படுகிறது.

தேனி மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கள ஆய்வு நடத்தவும், சாா் பதிவாளா் அலுவலகத்தில் பொது சேவை மையம் ஏற்படுத்தியும், பதிவுதாரா்களை இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற பதிவாளா் ஒருவா் கூறியது: பத்திரப்பதிவுக்கு வருவோரிடம் சாா்-பதிவாளா் நேரடியாகத் தொடா்பு கொண்டு அவா்களது சந்தேகங்களை தீா்த்தாலே, மற்றவா் தலையீட்டை தவிா்க்க முடியும். அலுவலகத்தில் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT