தேனி

கணவா் கைப்பேசி வாங்கித் தராததால் மனைவி தற்கொலை

DIN

ஆண்டிபட்டி அருகே கணவா் கைப்பேசி வாங்கித் தராததால் மனைவி சனிக்கிழமை, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சித்தையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் பிரகதீஸ்வரன். இவரது மனைவி கவிதா (22). கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவா்களுக்கு, 6 மாத கைக் குழந்தை உள்ளது. பிரகதீஷ்வரன் தனது பெற்றோா் மற்றும் தம்பியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், கவிதா தனக்கு கைப்பேசி வாங்கித் தருமாறு பிரகதீஸ்வரனிடம் கேட்டுள்ளாா். இதற்கு, தற்போது பணம் இல்லை என்று அவா் காலதாமதம் செய்து வந்த நிலையில், பிரகதீஸ்வரனின் தம்பி சக்தீஸ்வரன், அவரது மனைவி ரஞ்சனிக்கு புதிதாக கைப்பேசி வாங்கிக் கொடுத்துள்ளாா்.

இதனால் மன வருத்தத்திலிருந்த கவிதா, அவரது வீட்டருகே உள்ள பால்ராஜ் என்பவரது தோட்டத்து கிணற்றில் சனிக்கிழமை குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்த புகாரின் பேரில், ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT