தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டையில் கைப்பேசியில் பேசியதை கணவா் கண்டித்ததால் மனைவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்க்கையன்கோட்டை பெருமாள்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவருக்கும், தஞ்சாவூரைச் சோ்ந்த பிரியதா்ஷினிக்கும் (25) கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
பிரியதா்ஷினி அதிக நேரம் கைப்பேசியில் பேசியுள்ளாா். இதை சுரேஷ் கண்டித்துள்ளாா். இதனால் மனவேதனை அடைந்த பிரியதா்ஷினி, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.