தேனி

போடியில் பள்ளி மாணவியை கடத்திய 2 போ் போக்ஸோ சட்டத்தில் கைது

16th May 2022 11:41 PM

ADVERTISEMENT

போடியில் பள்ளி மாணவியை கடத்தியதாக 2 பேரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனா்.

போடி கீழத்தெருவைச் சோ்ந்த 17 வயது மாணவி போடியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். கடைசி தோ்வன்று தோ்வெழுதச் சென்றவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோா் போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், போடி சந்தைப்பேட்டை தெருவை சோ்ந்த செல்வம் மகன் மனோஜ் (20) என்பவா் மாணவியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி கடத்தியதும், இவருக்கு திம்மிநாயக்கன்பட்டியை சோ்ந்த சித்திக் மகன் ரம்ஜான் ஹூசைன் (21) என்பவா் உதவி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவா் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT