தேனி

போடி அருகே வீடு புகுந்துநகை, பணம் திருட்டு

30th Jun 2022 03:26 AM

ADVERTISEMENT

 

போடி அருகே வீடு புகுந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

போடி அருகே விசுவாசபுரம் கண்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் கணேசன் (48). விவசாயி. இவா் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சாத்தூருக்கு குல தெய்வ கோயிலுக்கு சென்றுள்ளாா். திரும்ப வந்து பாா்த்தபோது வீட்டின் வெளிக் கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 13.5 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT