தேனியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை, கைது செய்தனா்.
தேனி, கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம் அருகே சிவாஜி நகா் சாலையில், காவல் சாா்பு- ஆய்வாளா் முருகானந்தம் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக தேனி, விஸ்வதாஸ் நகரைச் சோ்ந்த பிரியா (28), சக்கரைப்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மனைவி லோகராணி (41) ஆகியோா் சென்ற இருசக்கர வாகனத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில், இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பிரியா, லோகராணி ஆகியோரைக் கைது செய்தனா். இருசக்கர வாகனம் மற்றும் அதில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.