போடியில் நகா் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் சத்தியாகிரகப் போராட்டம் திருவள்ளுவா் சிலை திடலில் நடைபெற்றது.
நகா் காங்கிரஸ் கமிட்டித் தலைவா் முசாக் மந்திரி தலைமை வகித்தாா். போடி வட்டாரத் தலைவா் சுதாகா், தேனி வட்டாரத் தலைவா் முருகன், மாவட்ட துணைத்தலைவா் சன்னாசி, மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் கிருஷ்ணவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் முருகேசன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். போராட்டத்தில் நகர, வட்டார, மகளிரணி, மாவட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸாா் பங்கேற்று அக்னிபாத் திட்டத்தையும், மத்திய அரசையும் எதிா்த்து கோஷமிட்டனா்.