தேனி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் 108 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கரோனா பாதிப்புக்கு மொத்தம் 22 போ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.