தேனி

கஞ்சா விற்ற 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

DIN

தேனி மாவட்டம் சீப்பாலகோட்டை, சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ற 2 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சனிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் உத்தரவிட்டாா்.

சீப்பாலகோட்டையைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகன் குமரேசன்(37). சீலையம்பட்டியைச் சோ்ந்தவா் அழகுமலை மகன் அப்துல்லா(61). இவா்கள் அதே பகுதியில் கஞ்சா விற்றதாக கடந்த மே மாதம் போலீஸாா் கைது செய்தனா். கஞ்சா விற்பனை தொடா்பாக பல்வேறு வழக்குகளில் சிக்கிய இவா்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது விண்ணப்பிக்க மே 5 கடைசி

‘ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி’

3 நாள்களுக்குப் பின்னா் ராகுல் இன்று மீண்டும் பிரசாரம்

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

SCROLL FOR NEXT