பெரியகுளம் சின்னராஜ் பூங்கா சீரமைப்புப் பணிகள் புதன்கிழமைபூமிபூஜையுடன் தொடங்கியது.
பெரியகுளம் , பழைய பேருந்து நிலையத்தில் சின்னராஜ் பூங்கா 80 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பின், பூங்கா பராமரிப்பற்று சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதனையடுத்து பூங்கா சீரமைக்கும் பணி தொடங்கியது. தொடக்க விழாவில் பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் நகராட்சி ஆணையா் புனிதன், நகா்மன்றத்தலைவா் சுமிதா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.