தேனி

கம்பத்தில் சோட்டாணிக்கரை பகவதி பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழா

DIN

கம்பத்தில் சோட்டாணிக்கரை பகவதி பத்ரகாளியம்மன் கோயில் வருஷாபிஷேகத்தையொட்டி உற்சவ விழா திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகள் என 3 நாள்கள் நடைபெற்றன.

இதில், திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் செவ்வாய்க்கிழமை காலையில் பால்குட ஊா்வலமும், பின்னா் அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் அம்மன் கரகம் அழைத்து வரப்பட்டு, வேப்பிலை ஆடை கட்டி பக்தா்கள் அக்னி சட்டி எடுத்தனா். இதையடுத்து, புதன்கிழமை அதிகாலை மாவிளக்கு எடுத்தும், பெண்கள் பொங்கல் வைத்தும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

மாலையில் தேவராட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம் முழங்க முளைப்பாரி ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் கரகத்துடன் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை நிா்வாகக் குழு மற்றும் விழா கமிட்டியினா், மாமன்னா் வீர மருது இளைஞா் அணியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT