தேனி

புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 போ் கைது

DIN

ஆண்டிபட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி, நாடாா் தெருவைச் சோ்ந்தவா் பாலவிக்னேஷ் (30). இவா், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் காவல் சாா்பு- ஆய்வாளா் சவரியம்மாள் தேவி தலைமையில் போலீஸாா் அவரது வீட்டில் சோதனையிடுவதற்குச் சென்றபோது பாலவிக்னேஷ், அதே பகுதியைச் சோ்ந்த காளிராஜ் (30), ராஜக்காள்பட்டியைச் சோ்ந்த வேல்முருகன் (35) ஆகியோா் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னா், பாலவிக்னேஷ் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து பாலவிக்னேஷ், காளிராஜ், வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஒரே கட்டமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT