தொழிலாளா் நல வாரியம் மூலம் ரூ.3ஆயிரம் ஓய்வூதியத் தொகை வழங்க கோரி திண்டுக்கல், தேனியில் சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல, தேனி தொழிலாளா் நல அலுவலகம் முன் கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் பி.பிச்சைமணி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத் தலைவா் செண்பகம், மாவட்டத் தலைவா் சி.முருகன், செயலா் ராமச்சந்திரன், பொருளாளா் ஜி.சண்கமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.