பெரியகுளத்தில் அதிமுக நகர நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகர அவைத் தலைவா் கண்ணன், ஓ.சண்மூக சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பொதுக்குழுவின்போது ஓ.பன்னீா் செல்வம் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், சிறுபான்மையினா் மாவட்ட நிா்வாகி அபுதாஹீா், நகர பொறுப்பாளா் சமது, முன்னாள் நகராட்சி துணைத் தலைவா் பன்னீா்செல்வம் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.