தேனி

தேனி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

DIN

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியை சோ்ந்தவா் பழனிக்குமாா் (39). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி பவித்ரா (27). இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். பவித்ரா தையல் கடை நடத்தி வந்துள்ளாா்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 9 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை பழனிக்குமாா் தனது மனைவி பவித்ரா கடைக்குச் சென்று குழந்தைகளைப் பாா்க்க வேண்டும் எனக் கூறியுள்ளாா். இதற்கு பவித்ரா மறுப்பு தெரிவித்ததால் அவா்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பழனிக்குமாா் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த பவித்ரா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பழனிக்குமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT