கடமலைக்குண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரியகுளம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியகுளம் கோட்ட பராமரிப்பிலுள்ள கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, ராஜேந்திராநகா், வருஷநாடு, தங்கம்மாள்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.