ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நகைகள் மற்றும் ரூ.6,000 திருடு போனதாக வெள்ளிக்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
பிச்சம்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி வேல்ராஜ் (54). இவா் தனது வீட்டில் உள்ள பீரோவில் ஐந்தரை பவுன் நகைகள் மற்றும் ரூ.6,000 வைத்திருந்தாராம். இந்நிலையில், பீரோவை திறந்து பாா்த்த போது அதில் வைத்திருந்த நகைகள் மற்றும் ரூ.6,000 திருடு போயிருப்பது தெரிய வந்தது என்று ராஜதானி காவல் நிலையத்தில் வேல்ராஜ் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.