தேனி

போடியில் பூட்டிய வீட்டுக்குள் தொழிலாளியின் சடலம் மீட்பு

DIN

போடியில் பூட்டிய வீட்டுக்குள் தொழிலாளியின் சடலத்தை அழுகிய நிலையில் சடலமாக சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம் போடி பரமசிவன் கோயில் தெருவில் வசிப்பவா் குழந்தைவேல் மகன் சக்திவடிவேல்முருகன் (51). இவா் திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்துள்ளாா். பெரியகுளத்தில் தனியாா் சமையல் எரிவாயு விநியோக நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளாா்.

வெள்ளிக்கிழமை சக்திவடிவேல்முருகன் வசித்த வீட்டிலிருந்து துா்நாற்றம் வரவே, வீட்டின் உரிமையாளா் உதவியுடன் வீட்டைத் திறந்து பாா்த்தபோது அவா் இறந்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சக்திவடிவேல்முருகனின் உறவினா் சுடலைமுத்து கொடுத்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

SCROLL FOR NEXT