போடி, ராசிங்காபுரம் துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் போடி மற்றும் ராசிங்காபுரம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, தேனி மின்வாரியச் செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.