தேனி

குடியரசு தின விழா: ஓ.பன்னீா்செல்வம், ரவீந்திரநாத் எம்பி தேசியக் கொடியேற்றினா்

DIN

குடியரசு தின விழாவையொட்டி போடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், பெரியகுளத்தில் மக்களவை உறுப்பினா் ரவீந்திரநாத்தும் புதன்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா்.

நாடு முழுவதும் 73 ஆவது குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் போடியில் உள்ள அவரது வீட்டில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய அவா், கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா் சையதுகான், மாவட்ட ஜெ.பேரவை பொருளாளா் குறிஞ்சி மணி, நகரச் செயலா் பழனிராஜ், பொருளாளா் ரமேஷ் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பெரியகுளம்: இதேபோல பெரியகுளத்தில் எம்பி அலுவலகத்தின் மாடியில் உள்ள கொடிக்கம்பத்தில் மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT