காமாட்சிபுரம் பகுதியில் வியாழக்கிழமை( ஜன.27) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னமனூா் மின்பகிா்மான செயற்பொறியாளா் ரமேஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: காமாட்சிபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வியாழக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணிவரை காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், சீலையம்பட்டி, கோட்டூா், கூழையனூா், சீப்பாலக்கோட்டை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.
வீரபாண்டியில் நாளை மின்தடை:
தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ.லட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பு: வீரபாண்டி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை(ஜன.28) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 முதல் பிற்பகல் 4 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.