தேனி மாவட்டம் கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜன.27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் துரைசாமிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகா், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என பெரியகுளம் கோட்ட செயற் பொறியாளா் ப.பாலபூமி தெரிவித்துள்ளாா். முன்னதாக புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டு வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.